கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக வடக்கு மாவட்ட தலைவரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான சங்கீதா மனு அளித்தார்.
கோவை: கோவை சூலூர் தாலுக்கா கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் கடை அமைக்கவுள்ளதற்கு தடை விதிக்க கோரி பாஜக வடக்கு மாவட்ட தலைவர் மனு அளித்துள்ளார்.

கோவை சூலூர் தாலுக்கா சுல்தான்பேட்டை ஒன்றியம் கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுபான சில்லறை விற்பனை கூடம் அமைய உள்ளதாகவும், அதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதிக்க வேண்டுமெனவும் பாஜக கோவை வடக்கு மாவட்ட தலைவரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சில்லறை விற்பனைக்கூடம் அமைய உள்ளதாக தெரிவதாகவும், இது குறித்து ஏற்கனவே காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு அமைய உள்ள மதுபான சில்லறை விற்பனை கூடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கூடம் அமைக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுருந்த அவர் இது போன்ற மதுபான விற்பனை கூடத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடும் எனவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கோவை சூலூர் தாலுக்கா சுல்தான்பேட்டை ஒன்றியம் கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுபான சில்லறை விற்பனை கூடம் அமைய உள்ளதாகவும், அதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதிக்க வேண்டுமெனவும் பாஜக கோவை வடக்கு மாவட்ட தலைவரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சில்லறை விற்பனைக்கூடம் அமைய உள்ளதாக தெரிவதாகவும், இது குறித்து ஏற்கனவே காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு அமைய உள்ள மதுபான சில்லறை விற்பனை கூடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கூடம் அமைக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுருந்த அவர் இது போன்ற மதுபான விற்பனை கூடத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடும் எனவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.