கோவையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கான கருத்தாளர் பயிற்சி துவக்கம்..!

தன்னார்வலர்களுக்கான கருத்தாளர் பயிற்சி கோவை தேர் நிலை திடம் பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


கோவை: கோவையில் துவங்கிய இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கான கருத்தாளர் பயிற்சி நடைபெற்றது.

தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். ஆசிரியர் உட்பட தன்னார்வலர்கள் பயிற்சி பெற்று மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று கல்வி கற்றுத் தர இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

கடந்த நவம்பர் 29ம் தேதி கோவையில் இத்திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் துவக்கி வைத்தார்.



இந்நிலையில், இன்று அத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான கருத்தாளர் பயிற்சி கோவை தேர் நிலை திடம் பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



இதில் ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரையாளர்கள், 195 கருத்தாளர்களுக்கு (ஆசிரியர், பயிற்றுநர்கள், சமூக அமைப்புகள்) பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியானது இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதில் பயிற்சி மேற்கொண்டவர்கள் இதர தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...