கோவையில் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..!! வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி தீவிரம்..!

கோவை மாநகராட்சி பகுதியில் 21 பேர், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் தற்போது 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதில், பெரியநெகமம், சின்னவேடம்பட்டி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 2 சிறுவர்கள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதியில் 21 பேர், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி மற்றும் ஊரக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் தற்போது மழை ஓய்ந்து வெயில் அடித்து வருகிறது. இதனால் தேங்கி நிற்கும் மழைதண்ணீரில் கொசுக்கள் வேகமாக உற்பத்தி ஆகும்.

இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. மாநகராட்சியில் 21 பேர், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையொட்டி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணியில் 800 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது காய்ச்சல் அதிகரித்து வருவதால் கூடுதலாக 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்வார்கள்.

அப்போது, அங்கு தண்ணீர் தேங்கி இருந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும் கொசுப்புழுக்களை அழிக்க அபேட் எனும் மருந்து ஊற்றுகின்றனர்.

வீடுகள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததற்காக இதுவரை ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ஊரக பகுதிகளில் ஊராட்சிக்கு 2 பேர் வீதமும், பேரூராட்சி பகுதியில் 10 பேர் வீதமும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதோடு வீடு, வீடாக ஆய்வு செய்து பழைய பொருட்களில் தண்ணீர் புகாதவாறு வைக்க அறிவுறுத்துகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...