கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சோமவார உற்சவ விழா - கோவில் பூட்டப்பட்டதால் வெளியே நின்று சாமி தரிசனம்..!

பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் பூட்டப்பட்ட கோவில் முன்பு உப்பு, மிளகு, அகல்விளக்கு, பத்தி, சூடம் தேங்காய் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சோமவார உற்சவ விழாவில் கோவில் பூட்டப்பட்டதால் வெளியே நின்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையத்தில் பழமைவாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சோமவார உற்சவ திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நேற்று சோமவார உற்சவ விழா தொடங்கியது. முதல் நாள் என்பதால் பக்தர்களிடம் வருகை குறைவாகவே இருந்தது.

ஆனால், இரண்டாம் நாளான இன்று கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் பக்தர்கள் நஞ்சுண்டேஸ்வர சாமியை தரிசனம் செய்ய வந்தனர்.

இந்நிலையில், கோவிலுக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகிகள் சார்பிலும் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் கோவில் நிர்வாகிகள் சோமவார உற்சவ விழா அன்று கோவில் கதவை பூட்டி விடுவார்கள்.

அதேபோல் இந்த ஆண்டும் நடைபெறும் சோமவார உற்சவ விழாவில் கோவில் நடை பூட்டப்பட்டிருந்தது. மேலும் கோவில் முன்பு கயிறு கட்டப்பட்டுள்ளது.



ஆனாலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பூட்டப்பட்ட கோவில் முன்பு உப்பு, மிளகு, அகல்விளக்கு, பத்தி, சூடம் தேங்காய் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...