சிறுமுகை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு..!

சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் புகுந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பத்திரமாக மீட்டு அடர் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர்.



கோவை: கோவை சிறுமுகை லிங்காபுரத்தில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் அவ்வப்போது வனப்பகுதிக்குள் இருந்து மான், யானை, பாம்பு உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று லிங்காபுரம் பகுதியில் உள்ள ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மலைப்பாம்பு ஒன்று உடலில் லேசான காயங்களுடன் படுத்திருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து, சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பத்திரமாக மீட்டனர்.

பின்னர், அதனை அடர் வனப்பகுதிக்குள் சென்று பத்திரமாக விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...