மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்கக்கோரி பொள்ளாச்சியில் மறியல் போராட்டம்..!

மேலும், அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் தங்களது போராட்டங்கள் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாற்றுத்திறனாளிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்

மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை தெலுங்கானா, புதுச்சேரி போல் ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் கடும் ஊனத்திற்கு ரூ.5,000/- வழங்க வேண்டும்.

மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சிகளில் தனிக்குழு அமைத்து அரசாணைப்படி 4 மணி நேர முழு வேலை வழங்க உறுதிப்படுத்த வேண்டும்.

நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசு உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகள் உள்ள ரேசன் கார்டுகளை மாதம் 35கி அரிசி வழங்கும் AAY கார்டுகளாக மாற்றி வழங்க வேண்டும்.

வீடு இல்லா மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும், அடையாள சான்று இல்லாதவர்களுக்கு கிராமங்களில் முகாம் நடத்தி

பேருந்து பயண சலுகை, ரயில் பயண சலுகை சான்றிதழ் உள்ளூரில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், இல்லையென்றால் தங்களது போராட்டங்கள் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னர், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...