கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு; ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

சிறையில் உள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு சற்று நேரத்திற்கு முன்பு இந்த சட்டத்திற்கான உத்தரவு நகல் சிறையில் வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள 17 வயது மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து, அவரது பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்பொழுது அவர் சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக மாநகர ஆணையர் பிரதீப் குமாருக்கு குண்டர் சட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த கோவை மாநகர ஆணையர் நேற்று இரவு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, சிறையில் உள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு சற்று நேரத்திற்கு முன்பு இந்த சட்டத்திற்கான உத்தரவு நகல் சிறையில் வழங்கப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...