சிறையில் உள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு சற்று நேரத்திற்கு முன்பு இந்த சட்டத்திற்கான உத்தரவு நகல் சிறையில் வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள 17 வயது மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, அவரது பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்பொழுது அவர் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக மாநகர ஆணையர் பிரதீப் குமாருக்கு குண்டர் சட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த கோவை மாநகர ஆணையர் நேற்று இரவு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, சிறையில் உள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு சற்று நேரத்திற்கு முன்பு இந்த சட்டத்திற்கான உத்தரவு நகல் சிறையில் வழங்கப்பட்டது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள 17 வயது மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, அவரது பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்பொழுது அவர் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக மாநகர ஆணையர் பிரதீப் குமாருக்கு குண்டர் சட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த கோவை மாநகர ஆணையர் நேற்று இரவு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, சிறையில் உள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு சற்று நேரத்திற்கு முன்பு இந்த சட்டத்திற்கான உத்தரவு நகல் சிறையில் வழங்கப்பட்டது.