இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட உத்திரராஜனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் உத்திரராஜ்(41). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு இவரது நிறுவனத்தில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தாத்தூர் பகுதியைச் சேர்ந்த சேவியர் என்பவருக்கு கடனாக பணம் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால், சேவியர் அந்த பணத்தை முறையாக செலுத்தவில்லை. இதுதொடர்பாக, உத்திரராஜ் மற்றும் ஜெயக்குமாருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உத்திரராஜ் ஜெயக்குமார் வீட்டுக்குச் சென்று அவரை தகாத வார்த்தையால் பேசி திட்டியதோடு ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர் செந்தில் குமார் ஆகியோரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உத்திரராஜனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞராக தேவசேனாதிபதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட உத்திரராஜனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் உத்திரராஜ்(41). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு இவரது நிறுவனத்தில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தாத்தூர் பகுதியைச் சேர்ந்த சேவியர் என்பவருக்கு கடனாக பணம் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால், சேவியர் அந்த பணத்தை முறையாக செலுத்தவில்லை. இதுதொடர்பாக, உத்திரராஜ் மற்றும் ஜெயக்குமாருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உத்திரராஜ் ஜெயக்குமார் வீட்டுக்குச் சென்று அவரை தகாத வார்த்தையால் பேசி திட்டியதோடு ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர் செந்தில் குமார் ஆகியோரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உத்திரராஜனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞராக தேவசேனாதிபதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட உத்திரராஜனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.