கோவையில் கஞ்சா வியாபாரியை துரத்தி பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் கஞ்சா வியாபாரியை துரத்தி பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் சுகந்தராஜா ஆகியோர் அண்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை சிவானந்தா காலணி பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ராஜேஸ் கண்ணா விசாரிக்க முற்பட்டபோது சூரிய பிரகாஷ் தப்பி ஓட முயற்சி செய்தார்.
விரட்டி பிடிக்க முயன்றபோது ஆய்வாளரைத் தள்ளிவிட்டு சூர்யபிரகாஷ் ஓடி விட்டார். இதில், ஆய்வாளருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன் கால்களில் காயம் ஏற்பட்டது. உடனிருந்த தலைமை காவலர் சுகந்தராஜா சூரிய பிரகாஷை துரத்தி பிடித்து விசாரணை மேற்கொண்டார். இதில் படுகாயமடைந்த ஆய்வாளர் ராஜேஸ் கண்ணா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் சுகந்தராஜா ஆகியோர் அண்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை சிவானந்தா காலணி பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ராஜேஸ் கண்ணா விசாரிக்க முற்பட்டபோது சூரிய பிரகாஷ் தப்பி ஓட முயற்சி செய்தார்.
விரட்டி பிடிக்க முயன்றபோது ஆய்வாளரைத் தள்ளிவிட்டு சூர்யபிரகாஷ் ஓடி விட்டார். இதில், ஆய்வாளருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன் கால்களில் காயம் ஏற்பட்டது. உடனிருந்த தலைமை காவலர் சுகந்தராஜா சூரிய பிரகாஷை துரத்தி பிடித்து விசாரணை மேற்கொண்டார். இதில் படுகாயமடைந்த ஆய்வாளர் ராஜேஸ் கண்ணா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.