கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் மூன்று மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் பலமாகத் தாக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்குச் சென்று தகராற்றில் ஈடுபட்ட 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவை: கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பாகக் காணப்பட்டது.
கிணத்துக்கடவு கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு மணிகண்டபுரம், கிருஷ்ணசாமிபுரம், நல்லட்டிபாளையம், சிங்கையைபுதூர், தாமரைக்குளம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளிலிருந்து சுமார் 1300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் மூன்று மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் பலமாகத் தாக்கிக் கொண்டனர். மேலும் 3-மாணவர்களுக்கும் ஆதரவாக மேலும் சிலர் மாணவர்கள் அடிதடியில் ஈடுபட்டதாக தெரிக்கிறது.
இதனால் காய்கறி சந்தை வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதனை பார்த்த அங்குள்ள பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீசார், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தகராற்றில் ஈடுபட்ட 12-ம்வகுப்பில் அறிவியல் மற்றும் கலை பிரிவில் படிக்கும் மாணவர்கள் 12-பேரை அழைத்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.
பின்னர், அங்கு கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கனகராஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் நலன் கருதி பள்ளி நிர்வாகம் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை.
கிணத்துக்கடவு கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு மணிகண்டபுரம், கிருஷ்ணசாமிபுரம், நல்லட்டிபாளையம், சிங்கையைபுதூர், தாமரைக்குளம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளிலிருந்து சுமார் 1300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் மூன்று மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் பலமாகத் தாக்கிக் கொண்டனர். மேலும் 3-மாணவர்களுக்கும் ஆதரவாக மேலும் சிலர் மாணவர்கள் அடிதடியில் ஈடுபட்டதாக தெரிக்கிறது.
இதனால் காய்கறி சந்தை வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதனை பார்த்த அங்குள்ள பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீசார், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தகராற்றில் ஈடுபட்ட 12-ம்வகுப்பில் அறிவியல் மற்றும் கலை பிரிவில் படிக்கும் மாணவர்கள் 12-பேரை அழைத்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.
பின்னர், அங்கு கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கனகராஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் நலன் கருதி பள்ளி நிர்வாகம் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை.