கிணத்துக்கடவில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்

கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் மூன்று மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் பலமாகத் தாக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்குச் சென்று தகராற்றில் ஈடுபட்ட 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


கோவை: கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பாகக் காணப்பட்டது.

கிணத்துக்கடவு கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு மணிகண்டபுரம், கிருஷ்ணசாமிபுரம், நல்லட்டிபாளையம், சிங்கையைபுதூர், தாமரைக்குளம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளிலிருந்து சுமார் 1300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் மூன்று மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் பலமாகத் தாக்கிக் கொண்டனர். மேலும் 3-மாணவர்களுக்கும் ஆதரவாக மேலும் சிலர் மாணவர்கள் அடிதடியில் ஈடுபட்டதாக தெரிக்கிறது.

இதனால் காய்கறி சந்தை வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதனை பார்த்த அங்குள்ள பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீசார், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தகராற்றில் ஈடுபட்ட 12-ம்வகுப்பில் அறிவியல் மற்றும் கலை பிரிவில் படிக்கும் மாணவர்கள் 12-பேரை அழைத்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.

பின்னர், அங்கு கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கனகராஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் நலன் கருதி பள்ளி நிர்வாகம் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...