சிறு-குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அமைப்புகளின்‌ கூட்டமைப்பு : ஒரு நாள்‌ கதவடைப்புக்கு அழைப்பு

தொடர்ந்து உயர்ந்து வரும்‌ மூலப்பொருள்‌ விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்திச் சிறு-குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அமைப்புகளின்‌ அகில இந்திய அளவிலான கூட்டமைப்பின்‌ கீழ்‌ நாடெங்கும்‌ உள்ள தொழில்‌ அமைப்புகள்‌ இணைந்து 20.12.2021 அன்று ஒரு நாள்‌ கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தொடர்ந்து உயர்ந்து வரும்‌ மூலப்பொருள்‌ விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்திச் சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அமைப்புகளின்‌ அகில இந்திய அளவிலான கூட்டமைப்பின்‌ கீழ்‌ நாடெங்கும்‌ உள்ள தொழில்‌ அமைப்புகள்‌ இணைந்து 20.12.2021 அன்று ஒரு நாள்‌ கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நம்‌ நாட்டின்‌ பொருளாதாரத்தின்‌ முக்கிய பின்புலமாக விளங்கும்‌ சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ துறையானது உள்நாட்டு உற்பத்தியில்‌ 30%, ஏற்றுமதி உற்பத்தி 48% பங்களிப்பு அளிப்பதோடு, 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்‌ துறையாகவும்‌, 40 கோடி பேர்‌ சார்ந்திருக்கும்‌ துறையாகவும்‌ உள்ளது.

இந்த நிலையில்‌ பவுண்டரிக்கு தேவையான இரும்பு மூலப்பொருள்‌ தொடங்கி, தேனிரும்பு, அலுமினியம்‌, தாமிரம்‌, பேக்கிங்‌ காகிதம்‌, பிளாஸ்டிக்‌ என அனைத்து மூலப்பொருட்களும்‌ சமாளிக்க முடியாத அளவு பல மடங்கு விலை ஏற்றம்‌ கண்டு வருகின்றன. இதனால்‌ நாடு முழுவதும்‌ உள்ள சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ மிகக்‌ கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தங்கள்‌ தொழிலைத்‌ தொடர இயலாமல்‌ இருப்பதோடு, பல லட்சம்‌ பேர்‌ வேலையிழக்கும்‌ அபாயமும்‌ தோன்றி உள்ளது.

இது குறித்து இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களுக்கும்‌, பல்வேறு துறைகளின்‌ அமைச்சர்களுக்கும்‌ பலமுறை கோரிக்கைகள்‌ அளித்தும்‌ மூலப்பொருள்‌ விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக்‌ கட்டுப்படுத்த இயலவில்லை.

எனவே, வரும்‌ 20.12.2021 திங்கள்‌ அன்று இந்திய நாடெங்கும்‌ உள்ள சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழிற்சாலைகள்‌, மூலப்பொருட்கள்‌ விலை ஏற்றத்தை கட்டுக்குள்‌ கொண்டுவர அரசு உடனடியாக தலையிட்டு, தீர்வுகாண வலியுறுத்தி, தங்கள்‌ தொழிற்சாலைகளில்‌ ஒரு நாள்‌ கதவடைப்பு செய்ய உள்ளோம்‌. மேலும்‌ அன்று காலை 11 மணி அளவில்‌ அந்தந்த மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகம்‌ முன்பு அமைதியான முறையில்‌ கூடி இச்செய்தியை பிரதமரின்‌ கவனத்திற்கு எடுத்துச்‌ செல்ல உள்ளோம்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...