கோவையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இஆப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 57க்குட்பட்ட மசக்காளி பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் இடத்தினை ஆய்வு செய்த ஆணையாளர் அவர்கள், Propel Industries பங்களிப்புத் தொகையாக வழங்கிய ரூ.26 இலட்சத்துடன் 50% தொகையை தமிழக அரசின் பங்களிப்பு என மொத்தம் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள், கழிவறை கட்டிடங்கள் கட்டவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு தேர்வு செய்தார்.



தொடர்ந்து வார்டு 64 க்குட்பட்ட கோ - ஆப்பரேட்டின் காலனி பிரதான சாலையில் 600 மீட்டர் தொலைவிற்கு முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை அமைக்கும் பணியையும், 24x7 குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் உடனடியாக செய்து முடித்த பின்னர், Perks school சாலையில் (Tamil nadu Urban Road Infrastructure Project (Turip)) தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.61 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கவுள்ள (480 மீட்டர் தொலைவுக்கு 9.30 மீட்டர் அகலம்) இடத்தை நேசில் பார்வையிட்டு ஆய்வு செய்து பழுதாகியுள்ள சாலைப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பின்னர், உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுநிதியிலிருந்து ரூ.15.40 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும் வகுப்பறை கட்டிடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, வரதராஜபுரம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் புதிதாக அமைக்கப்பட்ட 24x7 குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் மையம் மற்றும் மாநகராட்சி வரிவசூல் மையத்தை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர்கள் எழில், சத்யா, சரண்யா, ரவி, மண்டல சுகாதார அலுவலர் முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...