கோவையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இஆப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 57க்குட்பட்ட மசக்காளி பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் இடத்தினை ஆய்வு செய்த ஆணையாளர் அவர்கள், Propel Industries பங்களிப்புத் தொகையாக வழங்கிய ரூ.26 இலட்சத்துடன் 50% தொகையை தமிழக அரசின் பங்களிப்பு என மொத்தம் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள், கழிவறை கட்டிடங்கள் கட்டவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு தேர்வு செய்தார்.



தொடர்ந்து வார்டு 64 க்குட்பட்ட கோ - ஆப்பரேட்டின் காலனி பிரதான சாலையில் 600 மீட்டர் தொலைவிற்கு முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை அமைக்கும் பணியையும், 24x7 குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் உடனடியாக செய்து முடித்த பின்னர், Perks school சாலையில் (Tamil nadu Urban Road Infrastructure Project (Turip)) தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.61 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கவுள்ள (480 மீட்டர் தொலைவுக்கு 9.30 மீட்டர் அகலம்) இடத்தை நேசில் பார்வையிட்டு ஆய்வு செய்து பழுதாகியுள்ள சாலைப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பின்னர், உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுநிதியிலிருந்து ரூ.15.40 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும் வகுப்பறை கட்டிடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, வரதராஜபுரம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் புதிதாக அமைக்கப்பட்ட 24x7 குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் மையம் மற்றும் மாநகராட்சி வரிவசூல் மையத்தை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர்கள் எழில், சத்யா, சரண்யா, ரவி, மண்டல சுகாதார அலுவலர் முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...