நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "ஃபாரின் மதநெறி DMK சிற்றரசு ஒழிக" என்றும் எழுதி வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: மாரிதாஸ் கைதை கண்டித்து நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "DMK ஒழிக" என்றும் எழுதி வந்தவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரையில் மாரிதாஸ் என்ற யூடியூபர் சர்ச்சையை கிளப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவு செய்ததாகவும் கூறி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து, கைது சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும், பொதுமக்களுக்கும் பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் அவரது நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "ஃபாரின் மதநெறி DMK சிற்றரசு ஒழிக" என்றும் எழுதி வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பேரூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.