மேலும், வழக்குகளை விரைந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர அறிவுறுத்தினார்.
கோவை: கோவையில் உள்ள காவல் நிலையங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்ட காவல் ஆணையர் பிரதீப்குமார் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.
கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் திடீரென்று குனியமுத்தூர், செல்வபுரம் ஆகிய காவல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கிருந்த போலீசாரிடம் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் அதுகுறித்து விசாரணை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், வழக்குகளை விரைந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர அறிவுறுத்தினார். மேலும், காவல் நிலையங்களைத் தூய்மையாக பராமரிப்பதோடு, புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் திடீரென்று குனியமுத்தூர், செல்வபுரம் ஆகிய காவல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கிருந்த போலீசாரிடம் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் அதுகுறித்து விசாரணை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், வழக்குகளை விரைந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர அறிவுறுத்தினார். மேலும், காவல் நிலையங்களைத் தூய்மையாக பராமரிப்பதோடு, புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.