ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கஞ்சா புகைத்து விட்டு, மீதியை வீசி செல்கின்றனர். அதில் இருக்கும் விதைகள், மழையால் செடிகளாக வளர்ந்துள்ளன.
கோவை: கோவை அருகே குட்டையில் வளர்ந்த கஞ்சா செடிகளை போலீசார் தீயிட்டு அழித்தனர்.
கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பாப்பம்பட்டியில் ராமையன்குட்டை உள்ளது. இங்கு, கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற எஸ்.ஐ.,க்கள் நவநீதகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார், மூன்றடி உயரத்தில்,
ஆங்காங்கே சில கஞ்சா செடிகள் இருப்பதை கண்டனர். உடனடியாக, அவற்றை, தீயிட்டு அழித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
பாப்பம்பட்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். அவர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரிகள் சுற்றி வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கஞ்சா புகைத்து விட்டு, மீதியை வீசி செல்கின்றனர். அதில் இருக்கும் விதைகள், மழையால் செடிகளாக வளர்ந்துள்ளன.
குட்டைகள் மற்றும் சமுதாயக் கூடம், சாலை ஓரங்கள் என பல இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. அவற்றை கண்டறிந்து முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பாப்பம்பட்டியில் ராமையன்குட்டை உள்ளது. இங்கு, கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற எஸ்.ஐ.,க்கள் நவநீதகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார், மூன்றடி உயரத்தில்,
ஆங்காங்கே சில கஞ்சா செடிகள் இருப்பதை கண்டனர். உடனடியாக, அவற்றை, தீயிட்டு அழித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
பாப்பம்பட்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். அவர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரிகள் சுற்றி வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கஞ்சா புகைத்து விட்டு, மீதியை வீசி செல்கின்றனர். அதில் இருக்கும் விதைகள், மழையால் செடிகளாக வளர்ந்துள்ளன.
குட்டைகள் மற்றும் சமுதாயக் கூடம், சாலை ஓரங்கள் என பல இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. அவற்றை கண்டறிந்து முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.