கோவை சூலூர் அருகே குட்டையில் வளர்ந்த கஞ்சா செடிகள் தீவைத்து அழிப்பு..!

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கஞ்சா புகைத்து விட்டு, மீதியை வீசி செல்கின்றனர். அதில் இருக்கும் விதைகள், மழையால் செடிகளாக வளர்ந்துள்ளன.


கோவை: கோவை அருகே குட்டையில் வளர்ந்த கஞ்சா செடிகளை போலீசார் தீயிட்டு அழித்தனர்.

கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பாப்பம்பட்டியில் ராமையன்குட்டை உள்ளது. இங்கு, கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற எஸ்.ஐ.,க்கள் நவநீதகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார், மூன்றடி உயரத்தில்,

ஆங்காங்கே சில கஞ்சா செடிகள் இருப்பதை கண்டனர். உடனடியாக, அவற்றை, தீயிட்டு அழித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

பாப்பம்பட்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். அவர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரிகள் சுற்றி வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கஞ்சா புகைத்து விட்டு, மீதியை வீசி செல்கின்றனர். அதில் இருக்கும் விதைகள், மழையால் செடிகளாக வளர்ந்துள்ளன.

குட்டைகள் மற்றும் சமுதாயக் கூடம், சாலை ஓரங்கள் என பல இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. அவற்றை கண்டறிந்து முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...