கோவை சூலூர் அருகே குட்டையில் வளர்ந்த கஞ்சா செடிகள் தீவைத்து அழிப்பு..!

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கஞ்சா புகைத்து விட்டு, மீதியை வீசி செல்கின்றனர். அதில் இருக்கும் விதைகள், மழையால் செடிகளாக வளர்ந்துள்ளன.


கோவை: கோவை அருகே குட்டையில் வளர்ந்த கஞ்சா செடிகளை போலீசார் தீயிட்டு அழித்தனர்.

கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பாப்பம்பட்டியில் ராமையன்குட்டை உள்ளது. இங்கு, கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற எஸ்.ஐ.,க்கள் நவநீதகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார், மூன்றடி உயரத்தில்,

ஆங்காங்கே சில கஞ்சா செடிகள் இருப்பதை கண்டனர். உடனடியாக, அவற்றை, தீயிட்டு அழித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

பாப்பம்பட்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். அவர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரிகள் சுற்றி வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கஞ்சா புகைத்து விட்டு, மீதியை வீசி செல்கின்றனர். அதில் இருக்கும் விதைகள், மழையால் செடிகளாக வளர்ந்துள்ளன.

குட்டைகள் மற்றும் சமுதாயக் கூடம், சாலை ஓரங்கள் என பல இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. அவற்றை கண்டறிந்து முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...