EXCLUSIVE: 22 தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு 'கொடிசியா' மற்றும் மாவட்ட தொழில் மையம்உரிய மரியாதை அளிக்காமல் புறக்கணிப்பு: 'போசியா' கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் புகார்

தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (CODISSIA) தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தொடர்ந்து 22 தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளடக்கிய போசியா' கூட்டமைப்பு கொடிசியா மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



கோவை: 'போசியா' கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல், சிவசண்முககுமார் உள்ளிட்டோர் கூறியதாவது:

தொழில் நகரான கோவையில் தொழில்துறை வளர்ச்சிக்கான தேவைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதில் கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழில் அமைப்புகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட சங்கத்தை மட்டும் மையமாக வைத்து தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல.

தொழில் நகரில் நடத்தப்படும் தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 22 தொழில் அமைப்புகளை சேர்ந்த எங்களின் 'FOCIA' கூட்டமைப்புக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை. இத்தகைய செயலில் ஈடுபடும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம்(CODISSIA) மற்றும் மாவட்ட தொழில் மையத்தின்

செயல்பாடு மிகவும் வருந்தத்தக்கது.

தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மட்டுமின்றி தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடக்கும் கூட்டம் என்றாலும் எதற்கும் முறைப்படி எங்கள் கூட்டமைப்புக்கு தகவல் தெரிவிக்கப் படுவதில்லை.மாறாக சில கோரிக்கைகளில் எங்கள் கூட்டமைப்பின் அனுமதி பெறாமலேயே எங்கள் கூட்டமைப்பின் லோகோ மற்றும் சங்க உறுப்பினர்களின் தொழில் அமைப்பு பெயர்களை பயன்படுத்தி கோவை மாவட்ட தொழில் துறை சார்பில் வைக்கப்படும் கோரிக்கையாகஅரசிடம் வழங்கப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன் எங்கள் கூட்டமைப்பிலுள்ள தொழில் அமைப்பின் நிர்வாகிகளை கலந்தாலோசித்து இருக்க வேண்டும்.

சமீப நாட்களாக இது போன்ற செயல்கள் அதிகரிக்க துவங்கி உள்ளது மிகவும் வருந்தத்தக்கது. எங்கள் கூட்டமைப்பில் அனைத்து பிரிவுகளை சேர்ந்த தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளும் உறுப்பினராக உள்ளனர். எனவே எதிர்வரும் நாட்களில் எங்கள் கூட்டமைப்பு சார்பில் தனியாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...