சமூகவலைத்தள சேனலில் கோவை மாணவர்கள் குறித்து அவதூறு செய்தி; உளவுத்துறை விசாரணை

எப்போதோ நடை பெற்ற மாணவர்கள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தைச் சித்தரித்து, முப்படை தளபதியின் மரணத்துடன் ஒப்பிட்டு தவறாக ஒளிபரப்பியதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: சமூகவலைத்தள சேனலில் கோவை மாணவர்கள் குறித்து அவதூறு செய்தி; உளவுத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த சம்பவத்தை, கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஒரு பிரிவினர் கொண்டாடியதாகக் கேரளாவில் உள்ள ஒரு சமூகவலைத்தள சேனலில் ஒளிபரப்பானது. இது மேலும் சில சமூகவலைத்தள குரூப்புகளிலும் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை உளவுத்துறை போலீசார், அந்த கல்லூரியில் விசாரணை நடத்தியது. அப்போது சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தினத்தன்று, முப்படை தளபதி மரணம் அடைந்ததையொட்டி அந்த குறிப்பிட்ட கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

எப்போதோ நடை பெற்ற மாணவர்கள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தைச் சித்தரித்து, முப்படை தளபதியின் மரணத்துடன் ஒப்பிட்டு தவறாக ஒளிபரப்பியதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிய தகவலைக் கேரள போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருப்பதுடன், சம்பந்தப்பட்ட சமூகவலைத்தள சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...