சமூகவலைத்தள சேனலில் கோவை மாணவர்கள் குறித்து அவதூறு செய்தி; உளவுத்துறை விசாரணை

எப்போதோ நடை பெற்ற மாணவர்கள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தைச் சித்தரித்து, முப்படை தளபதியின் மரணத்துடன் ஒப்பிட்டு தவறாக ஒளிபரப்பியதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: சமூகவலைத்தள சேனலில் கோவை மாணவர்கள் குறித்து அவதூறு செய்தி; உளவுத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த சம்பவத்தை, கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஒரு பிரிவினர் கொண்டாடியதாகக் கேரளாவில் உள்ள ஒரு சமூகவலைத்தள சேனலில் ஒளிபரப்பானது. இது மேலும் சில சமூகவலைத்தள குரூப்புகளிலும் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை உளவுத்துறை போலீசார், அந்த கல்லூரியில் விசாரணை நடத்தியது. அப்போது சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தினத்தன்று, முப்படை தளபதி மரணம் அடைந்ததையொட்டி அந்த குறிப்பிட்ட கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

எப்போதோ நடை பெற்ற மாணவர்கள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தைச் சித்தரித்து, முப்படை தளபதியின் மரணத்துடன் ஒப்பிட்டு தவறாக ஒளிபரப்பியதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிய தகவலைக் கேரள போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருப்பதுடன், சம்பந்தப்பட்ட சமூகவலைத்தள சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...