சமூகவலைத்தள சேனலில் கோவை மாணவர்கள் குறித்து அவதூறு செய்தி; உளவுத்துறை விசாரணை

எப்போதோ நடை பெற்ற மாணவர்கள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தைச் சித்தரித்து, முப்படை தளபதியின் மரணத்துடன் ஒப்பிட்டு தவறாக ஒளிபரப்பியதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: சமூகவலைத்தள சேனலில் கோவை மாணவர்கள் குறித்து அவதூறு செய்தி; உளவுத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த சம்பவத்தை, கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஒரு பிரிவினர் கொண்டாடியதாகக் கேரளாவில் உள்ள ஒரு சமூகவலைத்தள சேனலில் ஒளிபரப்பானது. இது மேலும் சில சமூகவலைத்தள குரூப்புகளிலும் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை உளவுத்துறை போலீசார், அந்த கல்லூரியில் விசாரணை நடத்தியது. அப்போது சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தினத்தன்று, முப்படை தளபதி மரணம் அடைந்ததையொட்டி அந்த குறிப்பிட்ட கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

எப்போதோ நடை பெற்ற மாணவர்கள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தைச் சித்தரித்து, முப்படை தளபதியின் மரணத்துடன் ஒப்பிட்டு தவறாக ஒளிபரப்பியதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிய தகவலைக் கேரள போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருப்பதுடன், சம்பந்தப்பட்ட சமூகவலைத்தள சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...