சூலூர் பாப்பம்பட்டி ராமய்யன் குட்டையில் கஞ்சா செடி: பொதுமக்கள் அதிர்ச்சி

பாப்பம்பட்டி பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா பயிரிடப்பட்டு உள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தகவல் தெரிவிப்பவர்களைக் கஞ்சா விற்பனையாளர்கள் அச்சுறுத்துவதால் குறிப்பிட்ட இடங்களை அடையாளம் காட்டுவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.


கோவை: நேற்று சனிக்கிழமை மாலை, சூலூர் வட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பம்பட்டி, ராமய்யன் குட்டை அருகே கஞ்சா செடிகளை, பொதுமக்கள் பார்த்துள்ளனர். இந்த தகவல் அப்பகுதியினர் இடையே வேகமாகப் பரவியது.

இதனையடுத்து, தகவலின் பேரில் அப்பகுதிக்கு சூலூர் காவல் உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் சென்ற காவல்துறையினர், அங்கு வளர்ந்துள்ள கஞ்சா செடிகளை ஆய்வு செய்தனர். பின்னர், உடனடியாக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வரவழைக்கப்பட்டு அவர் முன்னிலையில் அந்த செடிகளை வேருடன் பிடுங்கித் தீயிட்டு அழித்தனர்.

கஞ்சா விற்பவர்களை அடிக்கடி கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சூலூர் பகுதியில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாகவும், கஞ்சா வேண்டுவோருக்கு இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்து சிலர் கொடுத்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், பாப்பம்பட்டி பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா பயிரிடப்பட்டு உள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தகவல் தெரிவிப்பவர்களைக் கஞ்சா விற்பனையாளர்கள் அச்சுறுத்துவதால் குறிப்பிட்ட இடங்களை அடையாளம் காட்டுவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

உடல் நலத்திற்கும் சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கஞ்சாவை இப்பகுதியிலிருந்து ஒழிக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சூலூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கஞ்சா செடிகள் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...