கோவையில் ரேக்ளா பந்தயம்... சீறிப்பாய்ந்த காளைகள்..!

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் நடைபெற்ற ரேக்ளா போட்டியில், வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி புல்லட் பைக், தங்க நாணயம் பரிசு வழங்கினார்.


கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி புல்லட்பைக், தங்க நாணயம் பரிசு வழங்கினார்.

கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்பிறந்த நாளையொட்டி நடந்த நேற்று ஒத்தகால்மண்டபத்தில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் இரட்டை மாடிகளுடன் கூடிய வண்டிகள் 200, 300 மீட்டர் என இரு பிரிவுகளின் இலக்கை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்தன.

பொள்ளாச்சி, வெள்ளலூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் என மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், 500-க்கும் மேற்பட்ட காளைகள் பந்தயத்தில் பங்கேற்றன.

இதில், 200 மீட்டர் பிரிவில், 'நெ.10முத்தூர்' பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், தொண்டாமுத்துார் கதிர்வேல், வீரப்பனூரை சேர்ந்த அன்பு தினேஷ்ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

300 மீட்டர் பிரிவில், தனசேகர், ராசு மற்றும் குருபிரகாஷ் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் வெற்றி வெற்றி பெற்றனர். இவர்களுக்கு புல்லட், பைக் மற்றும் ஒரு சவரன் தங்க நாணயத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.



நான்கு முதல், 10 வரையிலான இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயமும், 11 முதல், 20 வரையான , இடங்களுக்குக் கோப்பையும் வழங்கப்பட்டது.



கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கார்த்திக், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமதுயாசின் உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...