இந்த ஆய்வின்போது, முகக் கவசம், சமூக இடைவெளி நடைமுறைகளை பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்பற்றுமாறு கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கோவை: கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள தனியார் கடைகளில் மாநகராட்சி பறக்கும் படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், தொழிற்சாலைகள், நகைக்கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள் போன்ற பணி மேற்கொள்ளும் இடங்களில் முகக் கவசம், சமூக இடைவெளி நடைமுறைகளை பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் கடைகளில் மாநகராட்சி பறக்கும் படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் உறுதி செய்வதுடன், வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கைகளை சுத்தமாக கழுவுதற்கு சோப் ஆயில் உள்ளிட்ட வசதிகளை முறையாக அமைத்திட வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், தொழிற்சாலைகள், நகைக்கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள் போன்ற பணி மேற்கொள்ளும் இடங்களில் முகக் கவசம், சமூக இடைவெளி நடைமுறைகளை பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் கடைகளில் மாநகராட்சி பறக்கும் படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் உறுதி செய்வதுடன், வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கைகளை சுத்தமாக கழுவுதற்கு சோப் ஆயில் உள்ளிட்ட வசதிகளை முறையாக அமைத்திட வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.