மேலும், அவரிடம் பறிமுதல் செய்த செல்போனில் பல்வேறு இளம் பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை அடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்: சமூக வலைத்தளத்தில் பெண் போல் போலியான புகைப்படத்தை பதிவேற்றி கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த நியாஸ் என்பவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பெண் போல போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.
இதில் இவருடன் பழக்கமான திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பெண் குரலில் பேசி நட்புடன் பழகி உள்ளார். நட்புடன் பழகி வந்ததை அடுத்து கல்லூரி மாணவியிடம் அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார்.
மேலும், படங்களை பெற்ற நியாஸ் அதனை மார்பிங் செய்து ஆபாச படமாக உருவாக்கி அதனை மீண்டும் கல்லூரி மாணவிக்கு அனுப்பி, நிர்வாணமாக வீடியோ கால் அழைப்பில் வர வேண்டும், இல்லை என்றால் இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, கல்லூரி மாணவி திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நியாசை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றினர்.
மேலும், அவரது செல்போனை பார்த்த போது பல்வேறு இளம் பெண்களின் அரை நிர்வாணம், முழு நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த நியாஸ் என்பவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பெண் போல போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.
இதில் இவருடன் பழக்கமான திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பெண் குரலில் பேசி நட்புடன் பழகி உள்ளார். நட்புடன் பழகி வந்ததை அடுத்து கல்லூரி மாணவியிடம் அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார்.
மேலும், படங்களை பெற்ற நியாஸ் அதனை மார்பிங் செய்து ஆபாச படமாக உருவாக்கி அதனை மீண்டும் கல்லூரி மாணவிக்கு அனுப்பி, நிர்வாணமாக வீடியோ கால் அழைப்பில் வர வேண்டும், இல்லை என்றால் இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, கல்லூரி மாணவி திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நியாசை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றினர்.
மேலும், அவரது செல்போனை பார்த்த போது பல்வேறு இளம் பெண்களின் அரை நிர்வாணம், முழு நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.