இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததால் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூரில் சரக்கு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு தனது காரில் நேற்று காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், மதியம் கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ திடீரென வலது புறமாக திரும்பியது. இதனால் பின்னால் வந்த கார் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தால் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும், 4 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு தனது காரில் நேற்று காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், மதியம் கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ திடீரென வலது புறமாக திரும்பியது. இதனால் பின்னால் வந்த கார் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தால் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும், 4 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.