கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 4 வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயம்..!

இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததால் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூரில் சரக்கு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு தனது காரில் நேற்று காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், மதியம் கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ திடீரென வலது புறமாக திரும்பியது. இதனால் பின்னால் வந்த கார் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தால் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும், 4 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...