கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 4 வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயம்..!

இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததால் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூரில் சரக்கு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு தனது காரில் நேற்று காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், மதியம் கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ திடீரென வலது புறமாக திரும்பியது. இதனால் பின்னால் வந்த கார் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தால் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும், 4 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...