கோவையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை.. திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

9-ம் வகுப்பு மாணவிக்கு கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தநிலையில், திருமணம் செய்த வாலிபர் மீது குழந்தைத் திருமணச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.



கோவை: 9-ம் வகுப்பு மாணவிக்கு கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தநிலையில், திருமணம் செய்த வாலிபர் மீது குழந்தைத் திருமணச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 25, இருக்கும் உறவினரான கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15-வயது மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இவர்கள் காதலிக்கத் தொடங்கினர். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் எதிர்ப்பையும் மீறி அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பீளமேடு பகுதியிலேயே தனியாக வாடகை வீடு எடுத்துத் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் குழந்தை பிறந்தது. 15-வயது மாணவிக்கு குழந்தை பிறந்தது பற்றி மருத்துவமனை ஊழியர்கள் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து குரு மணிகண்டன் மீது குழந்தைத் திருமணச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாகக் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...