சிதலமடைந்த சிவன்‌ கோவில்‌: கலசத்திற்கு மீண்டும்‌ பிரதிஷ்டை செய்த ஈஷா யோகா மையம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்ட சிவன்‌ கோவிலின்‌ கோபுர கலசத்திற்குச் சத்குருவால்‌ பிரதிஷ்டை செய்யப்பட்ட எந்திரத்தைக் கொண்டு ஈஷா பிரம்மச்சாரிகள்‌ சக்கியூட்டினர்‌.



கோவை: பல ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்ட சிவன்‌ கோவிலின்‌ கோபுர கலசத்திற்குச் சத்குருவால்‌ பிரதிஷ்டை செய்யப்பட்ட எந்திரத்தைக் கொண்டு ஈஷா பிரம்மச்சாரிகள்‌ சக்கியூட்டினர்‌.

சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவில்‌ இருக்கும்‌ திருக்கழுக்குன்றம்‌ அருகே அமைந்துள்ளது. குடிபேரம்பாக்கம்‌ என்னும்‌ கிராமம்‌. அங்கு இருக்கும்‌ குமரேஸ்வரர்‌ கோவில்‌ முருகப் பெருமானால்‌ வழிப்பட்ட தலமாகவும்‌, மிகவும்‌ பழமையான சிவ தலமாகவும்‌ அறியப்படுகிறது.

இக்கோவில்‌ பல ஆண்டுகளாகப் பூஜைகளும்‌ வழிபாடுகளும்‌ சரியாக நடக்காமல்‌ சிதலமடைந்து கிடந்தது. இதனை பார்த்து மனம்‌ வருந்திய அவ்வூர்‌ பக்தர்கள்‌ சில தன்னார்வ அமைப்புகளின்‌ உதவியுடன்‌ அக்கோவிலை படிப்படியாக புனரமைத்து தற்போது புதுப்‌ பொலிவுடன்‌ மாற்றி இருக்கின்றனர்‌.

அத்துடன்‌, கோவிலுக்கு சிறப்பான முறையில்‌ கும்பாபிஷேகமும்‌ நடத்தி மகிழ்ந்துள்ளனர்‌. அதன்‌ ஒரு பகுதியாக, கோபுர கலசத்திற்கு சக்கியூட்டுவதற்காக அவர்கள்‌ ஈஷா பிரம்மாச்சாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர்‌.



அதை ஏற்ற ஈஷாவின்‌ பிரம்மாச்சாரிகள்‌ கோவையிலிருந்து அங்குச் சென்று சிறப்புப் பூஜை ஒன்றையும்‌ நடத்தினர்‌.



அப்போது சத்குரு அவர்கள்‌ பிரதிஷ்டை செய்த எந்திரத்தைக் கோபுர கலசத்திற்குள்‌ வைத்து குரு பூஜை செய்தனர்‌. மேலும்‌, 'யோக யோக யோகேஸ்வராய' என்ற மந்திர உச்சாடனையையும்‌ அவர்கள்‌ மேற்கொண்டனர்‌.



பின்னர்‌, ஆகம முறைப்படி அக்கலசம்‌ நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகமும்‌ நடைபெற்றது. இந்நிகழ்வில்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்ட சிவ பக்தர்கள்‌, கிராம மக்கள்‌ மற்றும்‌ ஈஷா தன்னார்வலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...