பழனிலிருந்து பொள்ளாச்சி வரும் அரசு பேருந்தில் சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா கடத்திய செடி முத்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி கைது செய்யப்பட்டார்.
கோவை: பொள்ளாச்சியில் முன்னாள் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அந்தியூர் சோதனை சாவடியில் உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது பழனிலிருந்து பொள்ளாச்சி வரும் அரசு பேருந்தில் சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா கடத்திய செடி முத்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூர்த்தி ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் என்பதும், தாலுகா காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பான் மசாலா, குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஹரிராமகிருஷ்ணன் என்பவரிடம் 10 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பறிமுதல் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அந்தியூர் சோதனை சாவடியில் உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது பழனிலிருந்து பொள்ளாச்சி வரும் அரசு பேருந்தில் சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா கடத்திய செடி முத்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூர்த்தி ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் என்பதும், தாலுகா காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பான் மசாலா, குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஹரிராமகிருஷ்ணன் என்பவரிடம் 10 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பறிமுதல் கைது செய்து சிறையில் அடைத்தனர்.