குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: புலன்‌ விசாரணை மற்றும்‌ விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13-பேரை பலி வாங்கிய ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான புலன்‌ விசாரணை மற்றும்‌ விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம்‌ இன்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்‌ சைலேந்திரபாபு தலைமையில்‌ குன்னூரில்‌ நடைபெற்றது.


குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான புலன்‌ விசாரணை மற்றும்‌ விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம்‌ இன்று 09.12.2021 ம்‌ தேதி மாலை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்‌ சைலேந்திரபாபு, தலைமையில்‌ குன்னூரில்‌ நடைபெற்றது.

கோவையை அடுத்த சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து காலை 11.30 மணிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அங்கு தீயணைப்பு வாகனம் தயாராக இருந்தது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது பனிமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. இந்த ஹெலிகாப்டர் எம்.ஐ.17 வி 5 வகை என்பதால் பனிமூட்டத்திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தைக் கடந்து சென்றபோது ஹெலிகாப்டர் தள்ளாடியபடி சென்று உள்ளது. மேலும் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டரால் உயரத்தில் பறக்கவில்லை. தாழ்வாக பறந்து சென்றது.

குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள இப்சேட் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அங்கும் பனிமூட்டம் பரவி இருந்தது. இந்த நிலையில் திடீரென்று அங்கு இருந்த 40 அடி உயரம் கொண்ட மரத்தில் ஹெலிகாப்டரின் இறக்கை மோதியது.

இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரின் மனைவி மதுலிகா ராவத், மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்ட சம்பவம், நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விபத்தில், விமானத்தின் குருப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இந்த விபத்து தொடர்பான புலன்‌ விசாரணை மற்றும்‌ விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம்‌ இன்று 09.12.2021 ம்‌ தேதி மாலை தமிழக காவல்துறை (தலைமை இயக்குனர்‌ சைலேந்திரபாபு, தலைமையில்‌ குன்னூரில்‌ நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்‌ கோவை சாக காவல்துறை துணைத்தலைவர்‌, நீலகிரி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌, தடய அறிவியல்‌ நிபுணர்கள்‌ மற்றும்‌ இந்த விபத்து வழக்கின்‌ விசாரணை அதிகாரி உட்பட இதர காவல்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்‌. இந்த ஆலோசனை கூட்டத்தில்‌ தடயவியல்‌ இயக்குனர்‌ அவர்களும்‌ விரிவான அறிவுரைகள்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ வழங்கினார்‌.

இது தொடர்பாக மேல்குன்னூர்‌ காவல்‌ நிலைய கு.எண்‌ 129/2021 பிரிவு 174 குவிமுச வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்து மாணிக்கம்‌ கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர் நீலகிரி மாவட்டம்‌ அவர்கள்‌, புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்‌. இதுவரை 26 சாட்சிகள்‌ விசாரிக்கப்பட்டுள்ளனர்‌.

சம்பவ இடத்திற்கு முதல்‌ முதலாக சென்று தீக்காயங்களுடன்‌ போராடிய நான்கு அதிகாரிகளை மீட்ட காவலர்‌ சிவா, முத்து மாணிக்கம்‌ கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர், துனைகாவல் கண்காணிப்பாளர் சசிகுமார்,‌ ஆய்வாளர்‌ பிரிதிவிராஜ்‌ சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி ஆகியோரை காவல்‌ துறை தலைமை இயக்குநர்‌ பாராட்டினார்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...