மேலும், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனத்தில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்ற வாலிபர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கிணத்துகடவு போலீசார் நேற்று நள்ளிரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வேகமாக கேரளாவை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் கேரளா மாநிலம் மவப்புரம் பகுதியை சேர்ந்த நெளசத்(22) என்பதும், இவர் திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலைபார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.
நெளசத் திருப்பூர் பகுதியில் கஞ்சா வாங்கிக்கொண்டு தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், கைது செய்யப்பட்ட நெளசத்திடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து நெளசத்தை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கிணத்துகடவு போலீசார் நேற்று நள்ளிரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வேகமாக கேரளாவை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் கேரளா மாநிலம் மவப்புரம் பகுதியை சேர்ந்த நெளசத்(22) என்பதும், இவர் திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலைபார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.
நெளசத் திருப்பூர் பகுதியில் கஞ்சா வாங்கிக்கொண்டு தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், கைது செய்யப்பட்ட நெளசத்திடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து நெளசத்தை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.