கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனத்தில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்ற வாலிபர் கைது..!

மேலும், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனத்தில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்ற வாலிபர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கிணத்துகடவு போலீசார் நேற்று நள்ளிரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக கேரளாவை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் கேரளா மாநிலம் மவப்புரம் பகுதியை சேர்ந்த நெளசத்(22) என்பதும், இவர் திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலைபார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.

நெளசத் திருப்பூர் பகுதியில் கஞ்சா வாங்கிக்கொண்டு தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றது விசாரணையில் தெரியவந்தது.



பின்னர், கைது செய்யப்பட்ட நெளசத்திடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து நெளசத்தை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...