கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனத்தில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்ற வாலிபர் கைது..!

மேலும், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனத்தில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்ற வாலிபர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கிணத்துகடவு போலீசார் நேற்று நள்ளிரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக கேரளாவை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் கேரளா மாநிலம் மவப்புரம் பகுதியை சேர்ந்த நெளசத்(22) என்பதும், இவர் திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலைபார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.

நெளசத் திருப்பூர் பகுதியில் கஞ்சா வாங்கிக்கொண்டு தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றது விசாரணையில் தெரியவந்தது.



பின்னர், கைது செய்யப்பட்ட நெளசத்திடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து நெளசத்தை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...