சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வரும் நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை வால்பாறை டவுன் பகுதியில் அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்கு முன் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள், காட்டு மான்கள், காட்டெருமைகள், சிங்கவால் குரங்குகள் போன்றவை வாழ்ந்து வருகிறது.
இதில் யானைகள், சிறுத்தைகள், சிங்கவால் குரங்குகள் போன்றவை வால்பாறை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனிடையே, நேற்று இரவு வால்பாறை மையப்பகுதியான அரசு கலைக் கல்லூரி முன்பு பிரதான சாலையில் சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் இருந்து வெளியேறி எந்தவித பயமுமின்றி நடந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிகழ்வு அனைத்து சம சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள், காட்டு மான்கள், காட்டெருமைகள், சிங்கவால் குரங்குகள் போன்றவை வாழ்ந்து வருகிறது.
இதில் யானைகள், சிறுத்தைகள், சிங்கவால் குரங்குகள் போன்றவை வால்பாறை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனிடையே, நேற்று இரவு வால்பாறை மையப்பகுதியான அரசு கலைக் கல்லூரி முன்பு பிரதான சாலையில் சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் இருந்து வெளியேறி எந்தவித பயமுமின்றி நடந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிகழ்வு அனைத்து சம சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.