குட்டி யானை குடல் புண் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் உயிரிழந்துள்ளதாக உடற்கூறு ஆய்வு செய்த வனத்துறை மருத்துவர் தெரிவித்தார்.
கோவை: கோவை வால்பாறை அருகே 2 வயது ஆண் குட்டி யானை இறந்தது தொடர்பாக மானாம்பள்ளி வனச்சரக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. காட்டு யானைகள் வனப் பகுதியிலிருந்து கூட்டங்கூட்டமாக குட்டியுடன் தேயிலைத் தோட்டத்தில் உலாவி வருகிறது. இரவு நேரத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடியிருப்பு வழியாக செல்கிறது.
இந்நிலையில், தோனி முடி எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் 13 காட்டு யானைகள் கடந்த இரண்டு தினங்களாக குட்டியுடன் சுற்றித் திரிந்தது. அதில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு தேயிலைத் தோட்டத்தில் இறந்து இருந்தது.
இரவு நேரத்தில் காட்டு யானைகள் வனப்பகுதிக்குச் சென்று விட்டதால், இறந்த நிலையில் குட்டியானை இருப்பதை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து வனத்துறை வனச்சரகர் மணிகண்டன் தலைமையில், வனத்துறை மருத்துவர் சுகுமார் முன்னிலையில் குட்டி யானையை ஆய்வு செய்து பார்த்தனர்.

குட்டி யானை குடல் புண் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் இருந்த நிலையில் இறந்து உள்ளதாக தெரிய வந்தது.
இதையடுத்து, யானையை உடற்கூறு ஆய்வு செய்து வனத்துறை அதிகாரி செல்வம், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆகியோர்கள் முன்னிலையில் மண்ணில் புதைத்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. காட்டு யானைகள் வனப் பகுதியிலிருந்து கூட்டங்கூட்டமாக குட்டியுடன் தேயிலைத் தோட்டத்தில் உலாவி வருகிறது. இரவு நேரத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடியிருப்பு வழியாக செல்கிறது.
இந்நிலையில், தோனி முடி எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் 13 காட்டு யானைகள் கடந்த இரண்டு தினங்களாக குட்டியுடன் சுற்றித் திரிந்தது. அதில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு தேயிலைத் தோட்டத்தில் இறந்து இருந்தது.
இரவு நேரத்தில் காட்டு யானைகள் வனப்பகுதிக்குச் சென்று விட்டதால், இறந்த நிலையில் குட்டியானை இருப்பதை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து வனத்துறை வனச்சரகர் மணிகண்டன் தலைமையில், வனத்துறை மருத்துவர் சுகுமார் முன்னிலையில் குட்டி யானையை ஆய்வு செய்து பார்த்தனர்.
குட்டி யானை குடல் புண் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் இருந்த நிலையில் இறந்து உள்ளதாக தெரிய வந்தது.
இதையடுத்து, யானையை உடற்கூறு ஆய்வு செய்து வனத்துறை அதிகாரி செல்வம், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆகியோர்கள் முன்னிலையில் மண்ணில் புதைத்தனர்.