கோவையில் வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது - வேளாண் பல்கலைக்கழகம் தகவல்..!

3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் முனைவர் ராமநாதன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் முனைவர் ராமநாதன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இது தவிர இன்னும் டிசம்பர் மாதத்தில் மழை பெய்ய வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஒரு நாளில் பெய்யும் மழையின் அளவு அதிகமாகி உள்ளது. ஆனால், மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைகிறது.

ஒரு நாளில் பெய்ய வேண்டிய மழை அளவு அதிகமாவதால் மண் அரிமானம் ஏற்படும். இதனால் மழைநீரை சேமிக்கும் திறனை மண் இழந்து விடுகிறது.

மழை பெய்யும் நாளும், மழையின் அளவும் அதிகமாக இருந்தால்தான் நல்லது. ஆனால் இப்போது மழை பெய்யும் நாள் குறைந்து மழைப்பொழிவு அதிகமாக இருப்பது எதை காட்டுகிறது என்றால் காலநிலை மாறுபாட்டின் அறிகுறி என்று சொல்லப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் மற்றொரு அறிகுறி என்னவென்றால் பருவம் தவறி மழை பெய்வது. கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்து விடும்.

ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 24ம் தேதிதான் நின்றது. அதாவது தென்மேற்கு பருவமழை அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது. இது பருவம் தவறி மழை பொழிவதை காட்டுகிறது.

இதேபோல், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பரில் முடிய வேண்டும். ஆனால், டிசம்பரில் முடியாமல் ஜனவரி 19ம் தேதி வரை மழை நீடித்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதன் காலத்தை தாண்டி வடகிழக்கு பருவமழை காலத்தையும் எடுத்துக்கொண்டுள்ளதும் காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...