3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் முனைவர் ராமநாதன் தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்டத்தில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் முனைவர் ராமநாதன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இது தவிர இன்னும் டிசம்பர் மாதத்தில் மழை பெய்ய வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஒரு நாளில் பெய்யும் மழையின் அளவு அதிகமாகி உள்ளது. ஆனால், மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைகிறது.
ஒரு நாளில் பெய்ய வேண்டிய மழை அளவு அதிகமாவதால் மண் அரிமானம் ஏற்படும். இதனால் மழைநீரை சேமிக்கும் திறனை மண் இழந்து விடுகிறது.
மழை பெய்யும் நாளும், மழையின் அளவும் அதிகமாக இருந்தால்தான் நல்லது. ஆனால் இப்போது மழை பெய்யும் நாள் குறைந்து மழைப்பொழிவு அதிகமாக இருப்பது எதை காட்டுகிறது என்றால் காலநிலை மாறுபாட்டின் அறிகுறி என்று சொல்லப்படுகிறது.
காலநிலை மாற்றத்தின் மற்றொரு அறிகுறி என்னவென்றால் பருவம் தவறி மழை பெய்வது. கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்து விடும்.
ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 24ம் தேதிதான் நின்றது. அதாவது தென்மேற்கு பருவமழை அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது. இது பருவம் தவறி மழை பொழிவதை காட்டுகிறது.
இதேபோல், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பரில் முடிய வேண்டும். ஆனால், டிசம்பரில் முடியாமல் ஜனவரி 19ம் தேதி வரை மழை நீடித்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதன் காலத்தை தாண்டி வடகிழக்கு பருவமழை காலத்தையும் எடுத்துக்கொண்டுள்ளதும் காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் முனைவர் ராமநாதன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இது தவிர இன்னும் டிசம்பர் மாதத்தில் மழை பெய்ய வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஒரு நாளில் பெய்யும் மழையின் அளவு அதிகமாகி உள்ளது. ஆனால், மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைகிறது.
ஒரு நாளில் பெய்ய வேண்டிய மழை அளவு அதிகமாவதால் மண் அரிமானம் ஏற்படும். இதனால் மழைநீரை சேமிக்கும் திறனை மண் இழந்து விடுகிறது.
மழை பெய்யும் நாளும், மழையின் அளவும் அதிகமாக இருந்தால்தான் நல்லது. ஆனால் இப்போது மழை பெய்யும் நாள் குறைந்து மழைப்பொழிவு அதிகமாக இருப்பது எதை காட்டுகிறது என்றால் காலநிலை மாறுபாட்டின் அறிகுறி என்று சொல்லப்படுகிறது.
காலநிலை மாற்றத்தின் மற்றொரு அறிகுறி என்னவென்றால் பருவம் தவறி மழை பெய்வது. கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்து விடும்.
ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 24ம் தேதிதான் நின்றது. அதாவது தென்மேற்கு பருவமழை அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது. இது பருவம் தவறி மழை பொழிவதை காட்டுகிறது.
இதேபோல், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பரில் முடிய வேண்டும். ஆனால், டிசம்பரில் முடியாமல் ஜனவரி 19ம் தேதி வரை மழை நீடித்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதன் காலத்தை தாண்டி வடகிழக்கு பருவமழை காலத்தையும் எடுத்துக்கொண்டுள்ளதும் காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.