காலை 10 மணிக்கு சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து விவசாயிகள் பயன்பெறலாம்.
கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 15-ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய, மாதந்தோறும் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.
அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகரம், வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது பிரச்சினைகளை முறையிடுவர்.
இதில் உடனடியாக தீர்வு காணப்படுவதால், விவசாயிகளுக்கு பயனளிப்பதாக அமைந்தது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அந்தந்த ஒன்றிய வேளாண் துறை அலுவலகத்தில், ‘ஆன்லைன்’ வாயிலாக குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், மீண்டும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, வரும் 15-ம் தேதி பொள்ளாச்சியில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், சார் ஆட்சியர் தலைமையில் வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து விவசாயிகள் பயன்பெறலாம்" என்று தெரிவித்தனர்.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய, மாதந்தோறும் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.
அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகரம், வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது பிரச்சினைகளை முறையிடுவர்.
இதில் உடனடியாக தீர்வு காணப்படுவதால், விவசாயிகளுக்கு பயனளிப்பதாக அமைந்தது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அந்தந்த ஒன்றிய வேளாண் துறை அலுவலகத்தில், ‘ஆன்லைன்’ வாயிலாக குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், மீண்டும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, வரும் 15-ம் தேதி பொள்ளாச்சியில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், சார் ஆட்சியர் தலைமையில் வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து விவசாயிகள் பயன்பெறலாம்" என்று தெரிவித்தனர்.