கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கைது..!

அரியர் தேர்வு முடிவுகள் அதிருப்திக்கு காரணமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்த, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுப்பு.


கோவை: கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தை கைவிடும்படி போலீசார் அறிவுறுத்தியும், மாணவர்கள் போராட்டத்தில் தொடர்ந்ததால், போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உறுப்பு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை மாணவ, மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் அரியர் தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அடுத்து, தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 80 சதவீதம் பேர் தேர்வில் தோல்வி அடைந்ததாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



மாணவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த கல்லூரி நிர்வாகம், அரியர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், வேளாண் பல்கலைக்கழகம் முன்பாக கடந்த 4 ஆம் தேதி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் மாணவ, மாணவியர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே பிரச்சினை குறித்தான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், இரவு 10 மணியை கடந்த போதிலும் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து வந்ததால், காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், 7 மாணவர்களை காவல்துறையினரால் கைது செய்தனர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க செயலாளர் தினேஷ் ராஜா கூறுகையில், ‘‘கடந்த 2019ஆம் ஆண்டு அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த ஆண்டுதான் தேர்வு நடைபெற்றது. செய்முறை தேர்வு கல்லூரிகளில் தான் நடத்தப்பட்டது, அதிலும் முறைகேடுகள் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பேர் தேர்வு எழுதி உள்ள நிலையில், மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியர் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் காரணமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்,’’ என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...