கிணத்துக்கடவு சிங்கையன்புதூரில் மது குடித்துவிட்டு பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு சிங்கையன்புதூரில் மது குடித்துவிட்டு பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அகத்தியர் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 22) என்பவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதியில் டாஸ்மாக் கடை மதுபான பாரில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு மது அருந்திவிட்டு பரோட்டா சாப்பிட்டதாகத் தெரிகிறது. பின்னர் தூங்கச் சென்ற கார்த்திக் ராஜா நள்ளிரவில் வாந்தி எடுத்ததை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கார்த்திக் ராஜா உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, கார்த்திக் ராஜாவின் உறவினர் தினேஷ் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில், அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் ராஜா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அகத்தியர் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 22) என்பவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதியில் டாஸ்மாக் கடை மதுபான பாரில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு மது அருந்திவிட்டு பரோட்டா சாப்பிட்டதாகத் தெரிகிறது. பின்னர் தூங்கச் சென்ற கார்த்திக் ராஜா நள்ளிரவில் வாந்தி எடுத்ததை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கார்த்திக் ராஜா உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, கார்த்திக் ராஜாவின் உறவினர் தினேஷ் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில், அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் ராஜா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.