பொள்ளாச்சி அருகே பைக் மோதியதில் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பைக் மோதியதில் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோகன்மஜி(20). இவர் வேட்டைக்காரன்புதூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேட்டைக்காரன்புதூர்-சேத்துமடை ரோடு அருகே உள்ள கோழிப்பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னாலிருந்து வந்த இருசக்கர வாகனம் மோகன் மஜி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்திய சரலப்பதியை சேர்ந்த ரமேஷ்(22) என்பவர் மீது, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோகன்மஜி(20). இவர் வேட்டைக்காரன்புதூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேட்டைக்காரன்புதூர்-சேத்துமடை ரோடு அருகே உள்ள கோழிப்பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னாலிருந்து வந்த இருசக்கர வாகனம் மோகன் மஜி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்திய சரலப்பதியை சேர்ந்த ரமேஷ்(22) என்பவர் மீது, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.