பொள்ளாச்சியில் பைக் மோதி வடமாநில தொழிலாளி பலி

பொள்ளாச்சி அருகே பைக் மோதியதில் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பைக் மோதியதில் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோகன்மஜி(20). இவர் வேட்டைக்காரன்புதூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேட்டைக்காரன்புதூர்-சேத்துமடை ரோடு அருகே உள்ள கோழிப்பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னாலிருந்து வந்த இருசக்கர வாகனம் மோகன் மஜி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்திய சரலப்பதியை சேர்ந்த ரமேஷ்(22) என்பவர் மீது, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...