காணாமல் போன மூதாட்டியின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது. உடலைக் கைப்பற்றிய ஆனைமலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே காணாமல் போன மூதாட்டியின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள வளந்தாயமரம் பகுதியைச் சேர்ந்தவர் பீபிஜான்(60), இவர் பல ஆண்டுகளாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் நேற்று முன்தினம் அம்பராம்பாளையம் தர்காவுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இரவு வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், ஆத்து பொள்ளாச்சி வழியாகச் செல்லும் ஆழியாறு ஆற்றங்கரையில், பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் உடலை, கைப்பற்றி விசாரித்ததில், அது காணாமல் போன பீபிஜான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய ஆனைமலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வளந்தாயமரம் பகுதியைச் சேர்ந்தவர் பீபிஜான்(60), இவர் பல ஆண்டுகளாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் நேற்று முன்தினம் அம்பராம்பாளையம் தர்காவுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இரவு வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், ஆத்து பொள்ளாச்சி வழியாகச் செல்லும் ஆழியாறு ஆற்றங்கரையில், பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் உடலை, கைப்பற்றி விசாரித்ததில், அது காணாமல் போன பீபிஜான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய ஆனைமலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.