பொள்ளாச்சி அருகே காணாமல் போன மூதாட்டி ஆற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போன மூதாட்டியின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது. உடலைக் கைப்பற்றிய ஆனைமலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே காணாமல் போன மூதாட்டியின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள வளந்தாயமரம் பகுதியைச் சேர்ந்தவர் பீபிஜான்(60), இவர் பல ஆண்டுகளாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் நேற்று முன்தினம் அம்பராம்பாளையம் தர்காவுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இரவு வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், ஆத்து பொள்ளாச்சி வழியாகச் செல்லும் ஆழியாறு ஆற்றங்கரையில், பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பெயரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் உடலை, கைப்பற்றி விசாரித்ததில், அது காணாமல் போன பீபிஜான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய ஆனைமலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...