நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்பாளர்கள்: மக்கள் நீதி மய்யம் பணிக்குழு அமைப்பு

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக்குழு மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மற்றும் கோவைக்கு, மாநில செயலாளர் (தலைமை நிலையப் பரப்புரையாளர்) பொறுப்பு அனுஷாரவிக்கு வழங்கப்பட்டுள்ளது.



கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக்குழு மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழுவை மக்கள் நீதி மய்யம் அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நகாப்புற உள்ளாட்சிகளை வலுவாக்கும்‌ முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்துவது, மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ பிரதான இலட்சியங்களில்‌ ஒன்று. இதன்‌ அடிப்படையில்‌ உள்ளாட்சிகளின்‌ உரிமைகளுக்காக மய்யமானது தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கிறது.

மய்யத்தின்‌ அனைத்து மாவட்ட நிர்வாகிகளும்‌ தவறாமல்‌ கிராமசபைக்‌ கூட்டங்களில்‌ பங்கேற்று, தங்களது ஜனநாயகக்‌ கடமையினை செவ்வனே தொடர்ந்து செய்துவந்திருக்கின்றனா்‌. கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகாப்புறத்திலும்‌ ஆட்சி நிர்வாகத்தில்‌ மக்களின்‌ பங்கேற்பை உறுதிப்படுத்த “ஏரியா சபை, வார்டு கமிட்டி போன்ற அமைப்புகள்‌ விரைவில்‌ செயல்பாட்டிற்கு வரவேண்டும்‌ என்று தொடர்ந்து வலியறுத்திவருகிறோம்‌.

நகாப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில்‌ தேர்தல்‌ அறிவிக்கப்படவுள்ளது. இந்தச்‌ சமயத்தில்‌ மக்கள்‌ நீதி மயயத்தின்‌ சார்பாக தேர்தலில்‌ போட்டியிட உள்ள வேட்பாளர்களைத்‌ தேர்வு செய்யும் பொருட்டு, துணைத்‌ தலைவர்‌ A.G.மெளரியா, I.P.S(Rtd.,)தலைமையில்‌ மாநிலத்‌ தேர்தல்‌ தலைமைப்‌ பணிக்‌ குழு மற்றும்‌ நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ நடைபெறவுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான நாடாளுமன்றத்‌ தொகுதிக்கு உட்பட்ட தேர்தல்‌ பணிக்குழுவை அறிவிக்கிறேன்‌.

நகர்ப்புற உள்ளாட்சித்‌ தோதலுக்கான வேட்புமனு தாக்கல்‌ செய்ய விருப்பமுள்ளவர்கள்‌, கீழ்க்காணும்‌ இணையத்தின்‌ வழியாகவும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

இணைய முகவரி:http://www.maiam.com/application—form.php

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக்குழு மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளதில் திருப்பூர் மற்றும் கோவைக்கு, மாநில செயலாளர் (தலைமை நிலையப் பரப்புரையாளர்) பொறுப்பு அனுஷாரவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...