உதகையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கத்தியால் குத்திக்கொலை

உதகை படகு இல்லம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிகள் கொண்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: உதகை படகு இல்லம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிகள் கொண்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதகை படகு இல்லம் அருகே தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவா என்பவர் பரத் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டார் உடனடியாக அப்பகுதியிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவாவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற வழியில் சிவா உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் அப்பகுதியிலிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.



சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் காரணமாகத் தகராறு இருந்து வந்துள்ளதாகவும் இதையடுத்து இருவருக்கும் இன்று மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர்.

பின்பு ஆத்திரமடைந்த பரத் சிவாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவா உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் பரத்தை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக உதகையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...