பொள்ளாச்சி பள்ளியில் கேரளாவில் இருந்து வந்த ஆசியருக்கு கொரோனா; இரு மாணவர்களுக்கு தொற்று உறுதி.

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் கேரளாவில் இருந்து வந்த ஆசியருக்கு கொரோனா; இரு மாணவர்களுக்கு தொற்று உறுதி.


கோவை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பரிசோதனையில், 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கும், 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையறிந்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "கேரளாவில் இருந்து வரும் ஆசிரியர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதை, தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து வகுப்பறைகள், மற்றும் பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது", என்றனர்.



இதனால், தொடர்ந்து 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் 240 மாணவ- மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

இதே போல, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வலசுபாளையம் கிராமத்தில் 9 வயது பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டான்.

இதனையடுத்து, மாணவனுக்கு கோவை சிங்காநல்லுரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, சுல்தான்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா உத்தரவின்பேரில், வலசுபாளையத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும், அக்கிராமம் முழுவதும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...