பொள்ளாச்சி பள்ளியில் கேரளாவில் இருந்து வந்த ஆசியருக்கு கொரோனா; இரு மாணவர்களுக்கு தொற்று உறுதி.

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் கேரளாவில் இருந்து வந்த ஆசியருக்கு கொரோனா; இரு மாணவர்களுக்கு தொற்று உறுதி.


கோவை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பரிசோதனையில், 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கும், 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையறிந்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "கேரளாவில் இருந்து வரும் ஆசிரியர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதை, தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து வகுப்பறைகள், மற்றும் பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது", என்றனர்.



இதனால், தொடர்ந்து 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் 240 மாணவ- மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

இதே போல, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வலசுபாளையம் கிராமத்தில் 9 வயது பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டான்.

இதனையடுத்து, மாணவனுக்கு கோவை சிங்காநல்லுரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, சுல்தான்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா உத்தரவின்பேரில், வலசுபாளையத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும், அக்கிராமம் முழுவதும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...