மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியபுத்தூருக்கு 8A என்ற ஒரே அரசுப்பேருந்து தேக்கம்பட்டி வழியாக இயங்கி வருவதால், மாணவர்கள் அவதி.
கோவை: மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் மாணவிகளை பாதி வழியில் இறக்கி விட்டதாக கூறி, பேருந்தை பெற்றோர்கள் சிறை பிடித்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியபுத்தூருக்கு 8A என்ற அரசுப்பேருந்து தேக்கம்பட்டி வழியாக இயங்கி வருகிறது. இந்த தடத்தில் ஓரிரு அரசுப்பேருந்துகளும், தனியார் பேருந்து ஒன்றும் மட்டுமே இயங்கி வருகிறது.
இந்நிலையில் , தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேக்கம்பட்டி, வெல்ஸ்புரம், வேல் நகர், நெல்லித்துறை, விளாமரத்தூர், பூதப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேல்நிலை பள்ளி படிப்பிற்காக மேட்டுப்பாளையம், புஜங்கனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தான் செல்ல வேண்டும்.
இப்பகுதிகளில், இருந்து மேட்டுப்பாளையம் பள்ளிகளுக்கு செல்லும் 100 க்கும் மேற்பட்டமாணவர்கள் இப்பேருந்தை மட்டுமே நம்பி உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல மகாதேவபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாணவர்கள் 8 A அரசுப்பேருந்து மூலம் பயணித்துள்ளனர். அப்போது, கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் சில மாணவிகளை அடுத்த பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
நேரத்திற்கு வர வேண்டிய மாணவிகள் வீட்டிற்கு உரிய நேரத்தில் வராத காரணத்தால் பரிதவித்து பெற்றோர்கள் நேற்றிரவு, தேக்கம்பட்டி வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வந்த பேருந்தினை சிறைபிடித்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டதை அடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பாக அரசு பேருந்துகளில் மாணவிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியபுத்தூருக்கு 8A என்ற அரசுப்பேருந்து தேக்கம்பட்டி வழியாக இயங்கி வருகிறது. இந்த தடத்தில் ஓரிரு அரசுப்பேருந்துகளும், தனியார் பேருந்து ஒன்றும் மட்டுமே இயங்கி வருகிறது.
இந்நிலையில் , தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேக்கம்பட்டி, வெல்ஸ்புரம், வேல் நகர், நெல்லித்துறை, விளாமரத்தூர், பூதப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேல்நிலை பள்ளி படிப்பிற்காக மேட்டுப்பாளையம், புஜங்கனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தான் செல்ல வேண்டும்.
இப்பகுதிகளில், இருந்து மேட்டுப்பாளையம் பள்ளிகளுக்கு செல்லும் 100 க்கும் மேற்பட்டமாணவர்கள் இப்பேருந்தை மட்டுமே நம்பி உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல மகாதேவபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாணவர்கள் 8 A அரசுப்பேருந்து மூலம் பயணித்துள்ளனர். அப்போது, கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் சில மாணவிகளை அடுத்த பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
நேரத்திற்கு வர வேண்டிய மாணவிகள் வீட்டிற்கு உரிய நேரத்தில் வராத காரணத்தால் பரிதவித்து பெற்றோர்கள் நேற்றிரவு, தேக்கம்பட்டி வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வந்த பேருந்தினை சிறைபிடித்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டதை அடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பாக அரசு பேருந்துகளில் மாணவிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.