மேட்டுப்பாளையத்தில் போதிய அரசு பேருந்து இல்லாததால் மாணவிகள் அவதி; பெற்றோர்கள் சாலை மறியல்..!

மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியபுத்தூருக்கு 8A என்ற ஒரே அரசுப்பேருந்து தேக்கம்பட்டி வழியாக இயங்கி வருவதால், மாணவர்கள் அவதி.


கோவை: மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் மாணவிகளை பாதி வழியில் இறக்கி விட்டதாக கூறி, பேருந்தை பெற்றோர்கள் சிறை பிடித்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியபுத்தூருக்கு 8A என்ற அரசுப்பேருந்து தேக்கம்பட்டி வழியாக இயங்கி வருகிறது. இந்த தடத்தில் ஓரிரு அரசுப்பேருந்துகளும், தனியார் பேருந்து ஒன்றும் மட்டுமே இயங்கி வருகிறது.

இந்நிலையில் , தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேக்கம்பட்டி, வெல்ஸ்புரம், வேல் நகர், நெல்லித்துறை, விளாமரத்தூர், பூதப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேல்நிலை பள்ளி படிப்பிற்காக மேட்டுப்பாளையம், புஜங்கனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தான் செல்ல வேண்டும்.

இப்பகுதிகளில், இருந்து மேட்டுப்பாளையம் பள்ளிகளுக்கு செல்லும் 100 க்கும் மேற்பட்டமாணவர்கள் இப்பேருந்தை மட்டுமே நம்பி உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல மகாதேவபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாணவர்கள் 8 A அரசுப்பேருந்து மூலம் பயணித்துள்ளனர். அப்போது, கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் சில மாணவிகளை அடுத்த பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

நேரத்திற்கு வர வேண்டிய மாணவிகள் வீட்டிற்கு உரிய நேரத்தில் வராத காரணத்தால் பரிதவித்து பெற்றோர்கள் நேற்றிரவு, தேக்கம்பட்டி வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வந்த பேருந்தினை சிறைபிடித்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டதை அடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பாக அரசு பேருந்துகளில் மாணவிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...