சாலை விரிவாக்க பணிக்காக 3-பெரிய மரங்களை வெட்டுவதா?: சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 3-பெரிய மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் வெட்ட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.


கோவை: நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 3-பெரிய மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் வெட்ட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சிறுவாணி விழுதுகள் சார்பில் கூறியதாவது:-



மத்வராயபுரம் ஊராட்சியில் இருட்டுப்பள்ளம் பகுதியில் விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அரச மரம் மற்றும் அதன் அருகில் தெற்கு புறம் உள்ள புளிய மரம் மற்றும் நல்லூர்வயல் பகுதியில் இவாஞ்சலின் பள்ளி முன்பு உள்ள 3-பெரிய மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் வெட்ட உள்ளதாகவும், சாலை அகலப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.



ஏற்கனவே சாலைகள் போதுமான அளவு 2-வருடங்களுக்கு முன்பே அகலப்படுத்தி விட்டநிலையில், நாம் உயிர் வாழ பிராணவாயுவைத் தரும் இந்த மரங்களைக் குறிப்பாக அரச மரங்களை வெட்டுவதற்குப் பதில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதுமான அளவிற்குச் சாலை அகலமானதாக இருக்கும் என்றும், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுச்சூழல் மேல் அக்கறை கொண்டு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என சிறுவாணி விழுதுகள் சார்பில் மனு அளிக்கப்பட உள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...